அமெரிக்காவில் காலடி வைத்து சரியா பத்து வருசம் ஆச்சு. 2004 நவம்பர் 14 மாலை, டெட்ராய்ட் - மெக்நமாரா ஏர்போர்ட, flight 5மணி நேரம் லேட், காலையில் ப்ராங்ஃபர்ட்டில் சாப்பிட்ட சீஸ்-சாண்ட்விச்சும், மதியம் ஃப்ளைட்டில் கொடுத்த டர்க்கி சாண்ட்விச்சும் வயிற்றை என்னவோ செய்து கொண்டிருந்தது. சரியான தூக்கம் இல்லாததால் டயர்டாக இருந்தது. இமிக்ரேஷனில் என்ன கேட்கப்போகிறார்களோ என்று எண்ணிக்கொண்டே ஹான்ட் லக்கேஜை எடுத்துக்கொண்டு எல்லோரையும் பின் தொடர்ந்து ஏர்போர்ட்டின் உள்ளேயே அரை கிலோமீட்டர் நடந்த பிறகு செக்யூரிட்டி ஆபிசர்கள் அங்கிருந்த வெவ்வேறு இமிகிரேஷன் வரிசைகளில் நிற்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர்.
ஒரே சமயத்தில் நான்கு ஃப்ளைட் வந்திறங்கியதால் நல்ல கூட்டம், மேலும் பத்து கவுன்டர்கள் திறந்தனர், ஆறடிக்கும் மேலாக கனத்த உருவத்துடன் பலர் கருப்பு ஃபுல் வின்டர்கோட் அணிந்து முன்னே வரிசையில் நின்று கொண்டிருந்தனர், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை, சற்றே மிரட்சியாக இருந்தது. என் முறை வந்தது, "உன் கம்பெனி பெயர் என்ன?", "நீ என்ன வேலை செய்ய போகிறாய்?" என்று இமிகிரேஷன் ஆபிசர் கேள்வி கேட்டார், சொன்னேன், இரண்டு ஆள்காட்டி விரல் ரேகையையும் பதிவெடுத்துவிட்டு, கேமராவை பார்க்கச் சொன்னார், முகத்தையும் படம் எடுத்துவிட்டு, "வெல்கம் டு அமெரிக்கா" என்று பாஸ்போர்ட்டை திருப்பிகொடுத்து உள்ளே செல்லச்சொல்லி ஒரு புன்னகைவிடுத்தார். தம்பி வெளியே என்னை receive பண்ண Indianapolisசிலிருந்து வந்திருந்தான், Detroit to Indianapolis கிட்டதட்ட சென்னையிலிருந்து மதுரை தூரம்.
Checked baggage-ஐ எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன், என்னை பார்த்து கையசைத்தான், மனதில் ஒரு தற்காலிக திருப்தி. "என்ன flight லேட்டா?" என்று கேட்டுக்கொண்டே ஒரு லக்கேஜை எடுத்துகொண்டான், பிறகு கார் ட்ரங்க்கில் வைத்துவிட்டு, ஏர்போர்ட்டைவிட்டு கம்பெனி கெஸ்ட் ஹவுசுக்குக் கிளம்பினோம், வெளியே வரும்போது இருட்டத்தொடங்கியிருந்தது. பிறகு கைபேசியிலிருந்து ஃப்ளோரிடாவில் இருக்கும் cousin sister-க்கு ஃபோன் போட்டுக்கொடுத்து பேசு என்றான், பேசினேன். அமெரிக்க சாலைகள் நான் சினிமாவில் பார்த்ததுபோல் இல்லை, அழுக்காக வெறிச்சோடியிருந்தது. Guest Houseல் யாரும் இல்லை, அதன் சாவி கம்பெனி HR மேனேஜர் ரமேசிடம் இருந்தது, அவர் வீட்டிற்குச் சென்று சாவியை வாங்கிக்கொண்டு, Guest house வந்தோம் - அது ஒரு அபார்ட்மெண்ட் .
நல்ல குளிர், உடல் விடாமல் நடுங்கியது, பெட்டிகளை இறக்கி அபார்ட்மெண்டில் வைத்துவிட்டு, கிச்சனைப் பார்த்தோம், முன்னே தங்கியிருந்தவர்கள் வைத்துவிட்டு போன மிச்ச மீதி அரிசி பருப்பும், பாத்திரங்களும் இருந்தது. இந்தியாவிற்கு போன்போட்டு அம்மாவிடமும், மனைவியுடனும் பேசினேன். அருகில் உள்ள gas stationனில் ஏதாவது இருக்குதா என்று பார்ப்போம் என்று தம்பி சொன்னான், சளி பிடித்திருந்தது, nyquil மற்றும் சில cookies, bread and வாழைப்பழம் வாங்கிவந்தான். நைட் இதை வைத்து manage பண்ணிக்கோ காலையில் ரமேஷ் உன்னை groceryக்கு கூப்பிட்டு போவார் என்று சொல்லிவிட்டு, நாளைக்கு call பண்றேன், பாத்துக்க என்று சொல்லிவிட்டு Indianapolisக்கு கிளம்பிவிட்டான். இரவு மணி 11.30 குளிர் தாங்கமுடியவில்லை நடுக்கம் குறையவில்லை, வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு Nyquil ஒரு மூடி குடித்துவிட்டு படுத்தேன், காலையில் 9 மணிக்கு ரமேசு வந்தார், thermostat எப்படி ஆப்பரேட் செய்யனும், எந்தெந்த பொருள் எங்கேயிருக்கு என்று சொல்லிவிட்டு சென்னையிலிருந்து அவருக்காக எடுத்துவந்திருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு "ரெடியானவுடன்போன் பண்ணுங்க நான் வந்து ஆபிசுக்கு கூட்டிட்டு போறேன் " என்று சொல்லி சென்றார், ஜூரம் பிடித்திருந்தது, குளிருக்கு இதமாக ஒரு காபிபோட்டு குடித்தேன், குளித்துவிட்டு ஊரிலிருந்து எடுத்துவந்த Calpol ஒன்றை போட்டுக்கொண்டு அருகில் இருக்கும் ஆபிசுக்கு சென்றேன், ரமேசு எல்லோரையும் அறிமுகப்படுத்தினார், பின் ஒரு கம்ப்யூட்ட்டரில் உட்கார வைத்துவிட்டு, நாளைக்கு சோசியல் செக்யூர்ட்டி ஆபிஸ் போய் SSNக்கு அப்ளை பண்ணுவோம் என்றார், பின் சில நண்பர்களுக்கு அவர்களுடைய போன் நம்பர் கேட்டு மெயில் அனுப்பிவிட்டு guest house திரும்பினேன்.
ஒரு calpolம் amoxylinம் போட்டுக்கொண்டு, அங்கிருந்த electric cookerல் சாதம் வைத்துவிட்டு, கேஸ் ஸ்டவ்வில் குக்கரில் பருப்பு வைத்துவிட்டு டிவியை ஆன் பண்ணினேன், ஒரு roomக்கான காசு கொடுத்தால் போதும் இரண்டு roomக்கு கார்பெட் போட்டுத்தருவோம் என்று Empire Today விளம்பரத்தில் ஒரு தாத்தா சொல்லிக்கொண்டிருந்தார். பதினைந்து நிமிடம் கழித்து பருப்புசாதம் ரெடி சாப்பிட்டுவிட்டு ரூமில் படுத்தேன். போன் அடித்தது, தம்பி பேசினான் விடியற்காலை 5மணிக்கு போய் சேர்ந்ததாகவும், அவனிடம் கொடுத்த லக்கேஜில் இரண்டு புளிக்காய்ச்சல் டப்பாவும் இருக்கு, உனக்கு வேற உடம்பு சரியில்ல சமைக்கக் கஷ்டப்படுவ ஓவர்நைட் Fedexல் அனுப்பி வைக்கிறேன் என்றான். தலைவலியும் ஜுரமும் அதிகமானது.
--- பச்சையின் இச்சை அடுத்த பதிவில் தொடரும்
--- பச்சையின் இச்சை அடுத்த பதிவில் தொடரும்
Comments
Post a Comment