சில நாட்களுக்கு முன்பு அலுவல் முடிந்து வீட்டுக்குக் கிளம்பும்போது சக நண்பர் சையதுடன் பேசிக்கொண்டே கிளம்பினேன். மழை தூரிக்கொண்டிருந்தது, car parking-ல் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவர், "do you know how birds use the camouflage?" என்றார். என்னடா ஏதோ சம்பந்தம் இல்லாமல் Discovery channel பக்கம் டாபிக்கை மாத்துறாரே என்று அவரை பார்த்தேன், அருகிலிருந்த car parking இடையே போடப்பட்டிருந்த கூழாங்கற்களை நோக்கிக் கையை நீட்டினார், ஒன்றும் தெரியவில்லை. அருகில் அழைத்துச்சென்றார், ஒரு பறவை உட்கார்ந்திருந்தது தெரிந்தது, எங்களைக் கண்டதும் பறக்கவில்லை, மாறாக கோபமாக சிலிர்த்தது. பின் அவரே விளக்கினார்,"it's hatching" என்று . மழை வலுத்ததாலும், மேலும் அங்கிருப்பது என்னவோ ஆஸ்பத்திரியில் அடுத்தவங்க லேபர் ரூமை எட்டிப்பார்ப்பதுபோல் இருந்தது, அதை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமென்று காரை நோக்கி கிளம்பினேன். காரை ஸ்டார்ட் செய்து வீடு வரும்போது அதை பற்றிய சிந்தனை, கனத்த மழை பெய்தால் அது என்ன செய்யும், பறவைகள் பெரும்பாலும் மரத்தில்தானே கூடுகட்டி முட்டையிடும் இந்தப் பறவை ஏன் மனிதர்க